விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்: நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா வலியுறுத்தல்
வறட்சியினால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என திங்கள்கிழமை சேரன்மகாதேவியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.









