தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நவ.7ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதை அடுத்து, அங்கே 144 தடை உத்தரவு போடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விதிக்கப்பட்ட இந்தத் தடையுத்தரவால், எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. அரசியல், சமூக நிகழ்ச்சிகளும், கூட்டங்களும் நடத்தப்படவில்லை. மேலும், கோவில் திருவிழாக்கள்கூட நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அமைதி திரும்பியதை அடுத்து, கடந்த மாதம் சில கிராமங்களில் மட்டும் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.