புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது: அஸ்ரா கர்க் தகவல்

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட 144 தடையுத்தரவு மாவட்டம் முழுவதும் இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் தெரிவித்தார்.

News image
Updated On :15 ஏப்ரல் 2013, 7:27 am

முருகன்

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட 144 தடையுத்தரவு மாவட்டம் முழுவதும் இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நவ.7ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதை அடுத்து, அங்கே 144 தடை உத்தரவு போடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில்  விதிக்கப்பட்ட இந்தத் தடையுத்தரவால், எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. அரசியல், சமூக நிகழ்ச்சிகளும், கூட்டங்களும் நடத்தப்படவில்லை. மேலும், கோவில் திருவிழாக்கள்கூட நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அமைதி திரும்பியதை அடுத்து, கடந்த மாதம் சில கிராமங்களில் மட்டும் இந்தத் தடை  விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.