லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் 16 வீடுகள் தீயில் நாசம்: மூதாட்டி சாவு

விருதுநகரில் அடுத்தடுத்து 16 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. மூதாட்டி உயிரிழந்தார்.

Updated On :24 ஏப்ரல் 2013, 4:16 am

விருதுநகரில் அடுத்தடுத்து 16 வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. மூதாட்டி உயிரிழந்தார்.

விருதுநகர் தந்திமரத்தெரு பகுதியில் உள்ள சாமியார் கிணற்றுத்தெருவில் வசித்தவர் பட்டம்மாள் (60). செவ்வாய்க்கிழமை இரவு சமையல் செய்த போது  அவரது சேலையி்ல் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதில் அவர் கருகி உயிரிழந்தார். பட்டம்மாள் உடலில் பற்றிய தீ கூரையில் பற்றி அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. அவற்றில் இருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி தப்பினர். காற்றின் வேகத்தால் 16 வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.