மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

விழுப்புரம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் படுகாயம்

விழுப்புரம் அருகே சிந்தாமணியில் அரசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Updated On :29 ஏப்ரல் 2013, 5:39 am

விழுப்புரம் அருகே சிந்தாமணியில் அரசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, விழுப்புரம் சிந்தாமணி அருகே வந்தபோது, பஸ்ஸை முந்திச் செல்ல வேகமாக வந்த லாரிக்கு வழிவிடும்போது சாலையோரப் பள்ளத்தில் சரிந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில்  ஓட்டுநர் சுருளிவேல், நடத்துனர் சங்கர்ராமன், பயணிகள் கரூர் ராதிகா, மதுரையைச் சேர்ந்த கதிர்வேல், பாண்டியராஜன் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் 29 பேருக்கு லேசான காயம்  ஏற்பட்டது. இந்தப் பேருந்தில் 39 பேர் பயணித்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.