பெரியாறு பிரதான கால்வாயில் மூழ்கி பிளஸ் டூ மாணவன் சாவு
பெரியாறு பிரதானக் கால்வாய் கள்ளந்திரி மதகு அருகே நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை இறந்தார்.


பெரியாறு பிரதானக் கால்வாய் கள்ளந்திரி மதகு அருகே நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை இறந்தார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் சந்திரசேகர். இவரது மகன் பவித்திரன் (17). பிளஸ் டூ மாணவரான இவர், நண்பர்களுடன் கள்ளந்திரி பெரியாறு பிரதானக் கால்வாயில் குளிக்க வந்திருந்தார். அப்போது கால்வாய் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினார். இவரது சடலத்தை நீண்டநேரம்தேடி தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அபாய அறிவிப்பு வேண்டும்
பிரதான கால்வாயில் குளிப்பதற்காக மதுரையிலிருந்து ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கள்ளந்திரிக்கு விடுமுறைநாள்களில் வருகின்றனர். பெரும்பாலோனோருக்கு நீச்சல் தெரிவதில்லை. இந்நிலையில், கால்வாயில் நீரின் வேகமும் அதிகம். இதனால் நீரில் இழுத்துச் செல்லப்படுவோர் 9-வது பிரிவு கால்வாயில் சுழலில் சிக்கி இறக்க நேரிடுகிறது.
இதுதொடர்பாக எவ்விதமான எச்சரிக்கைப் பலகையும் ஆற்றங்கரையில் வைக்கப்படவில்லை. பொதுப்பணித்துறையினர் கால்வாய் கரையில் எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும். அல்லது ஆற்றில் பிரதான கால்வாயில் குளிக்கத் தடைவிதிக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். கடந்த ஆண்டில் 7 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...