அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே நடந்து சென்றவரை வழிமறித்து கத்தியைக் காட்டிபணம் பறித்த ரவுடி கைது

விருதுநகர் அருகே நடந்து சென்றவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.2200 வழிப்பறி செய்த ரவுடியை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :6 ஆகஸ்ட் 2013, 5:37 pm

விருதுநகர் அருகே நடந்து சென்றவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.2200 வழிப்பறி செய்த ரவுடியை செவ்வாய்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    விருதுநகர் அருகே கட்டனார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்கனி(47). இவர் திங்கள்கிழமை இரவு கன்னிசேரி கால்நடை மருத்துவமனை அருகே அவரது கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த எட்வர்ட்ராஜ் என்பவரின் மகன் ரவுடி துரட்டி பாண்டி(43) என்பவர் வழிமறித்து மது குடிப்பதற்கு பணம் கேட்டாராம். அதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததை அடுத்து,   முதுக்கு பின்புறம் மறைந்து வைத்திருந்த பட்டாகத்தியைக் செல்வக்கனியின் கழுத்தில் வைத்து சட்டைப் பையில் இருந்த ரூ.2200 வழிப்பறி செய்துள்ளார்.

    அப்போது, கொலை செய்வதாக மிரட்டியதால் பயந்து சத்தம் போட அருகில் இருந்தவர்கள் தடுக்க வந்தனர். அப்போது, அவர்களை பார்த்து கத்தியை சுழற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியதை அடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கடையை அடைத்து ஓடினார்களாம். இது தொடர்பாக செல்வக்கனி வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் துரட்டி பாண்டி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.