கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழுக்கூட்டம் சிதம்பரம் அறுபத்துமூவர் குருபூஜை மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆ.அதியமான், நிர்வாகிகள் ரா.தமிழ்வளவன், ரத்தினவேல், க.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு வரவேற்றார். பொறியாளர் அ.கலியபெருமாள், மையக்குழு உறுப்பினர் மு.வரதராசனார், மாநில நிர்வாகிகள் கோ.நீதிவளவன், ரா.காவியச்செல்வன், ரா.நெடுமாறன், செல்வமணி, கரிகால்வளவன், கலைமுதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.