நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் கைது

பழனி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2013, 5:36 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் கைது செய்யப்பட்டார்.

    பழனி அருகே பெருமாள்புதூர் அய்யர் தோட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மணிமயில்(32). உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இதே ஊரை சேர்ந்த தண்டபாணி என்பவர் மீது ராதாகிருஷ்ணன் தரப்பில் கடந்த சிலதினம் முன் புகார் செய்யப்பட்டது.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ராதாகிருஷ்ணன் வெளியூருக்கு சென்றிருந்த போது அதே ஊரை சேர்ந்த நாகப்பன் மகன் தண்டபாணி(48) என்பவர் மணிமயிலிடம் என்மீது ஏன் புகார் செய்தாய் என தகராறு செய்துள்ளார்.  மேலும், அவரை ஆபாசமாக பேசி, தகாத முறையில் நடந்து கொண்டு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.  இதைத் தொடர்ந்து கணவர் ஊரில் இருந்து வந்த பின் பழனி தாலுகா காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மணிமயில் கொடுத்த புகாரின் பேரில் தண்டபாணியை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.