எழுத்தாளர் சிவசங்கரி: இந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி ஜெய்ப்பூரில்தான் நடக்கிறது. அதேபோல கொல்கத்தா, புதுதில்லி, நெய்வேலி, சென்னை உள்பட பல புத்தகக் கண்காட்சிக்கு சென்று வருகிறேன். ஆனால், இதுபோன்ற இலக்கிய ஆர்வம் கொண்ட கூட்டத்தை பார்த்ததில்லை. புத்தகம் வாசிக்கும்போது பிற சிந்தனைகளை கைவிட்டு, புத்தகத்தில் இருக்கும் கருத்துக்களை முழுமையாக உள்வாங்க வேண்டும். நல்ல கருத்துக்களை உள்வாங்கும்போது நல்ல சிந்தனைகள் பிறக்கும். 1970, 1980-களில் இலக்கியவாதிகள் குறிப்பாக பெண் படைப்பாளிகள், தலித் இலக்கிய படைப்பாளிகள் கோலோச்ச தொடங்கினர். காட்சி ஊடகங்கள் வந்தபோதும் இப்போதும் வாசிப்பு பழக்கம் குறையவில்லை என்றார்.