அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

அருப்புக்கோட்டையில் பேராசிரியையிடம் 6 சவரன் நகை திருட்டு

அருப்புக்கோட்டையில் நடந்த சென்ற பேராசிரியையிடம் 6 சவரன் நகையை பறித்து கொண்டு பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Updated On :17 ஆகஸ்ட் 2013, 5:44 pm

அருப்புக்கோட்டையில் நடந்த சென்ற பேராசிரியையிடம் 6 சவரன் நகையை பறித்து கொண்டு பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கம் நகரில் ஜவஹர் தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி. இவர் துபையில் பணியிலிருந்து வருகிறார். இவரது மனைவி விமலாதேவி(41) இங்குள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்து கடைவீதிக்கு பொருள்கள் வாங்குவதற்காக தனது மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் விமலாதேவியின் கழுத்தில் கிடந்த 6 சவரன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம்.

    இது தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் விமலாதேவி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.