நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி : மாணவர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் இன்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். இதையடுத்து, அக்கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 9:02 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலையில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் இன்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். இதையடுத்து, அக்கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று திருவண்ணாமலை அரசு கல்லூரி துவக்குவதை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆ. ஞானசேகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் தமிழக ஒதுக்கீடுக்கு அளிக்கப்பட்டது. அதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்ததால்தான் தங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்றும், அதிலும், அவர்களது பகுதிக்கு அருகிலேயே அரசு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.