கடலூரில் ரூபாய் ஒன்றரை லட்சத்தை லஞ்சமாக வாங்கிய மாவட்ட வணிக வரித் துறை அதிகாரி ராஜேஸ்வரி (40) லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினரால் வெள்ளியன்று கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்ட வணிக வரித் துறை அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி, சிதம்பரம் பகுதியில் இன்று கடைகளில் அதிரடி ஆய்வு செய்தார்.
அப்போது, தேரடி கடைத் தெருவில் உள்ள நிலக்கரி சாம்பலில் இருந்து செங்கல் தயாரிக்கும் பி.எஸ்.கே. பிளை ஆஷ் நிறுவனத்தில் ஆய்வு செய்த ராஜேஸ்வரி, நிறுவனத்துக்கு விதிக்கப்படும் வரியில் இருந்து குறைத்து வரி விதிக்க ரூ.8 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
இது குறித்து நிறுவன உரிமையாளர் சதீஷ் குமார் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, இன்று மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் சதீஷ், திருமால், சண்முகம் உள்ளிட்ட காவல்துறையினர் அந்த நிறுவனத்துக்கு அருகே மறைந்திருந்தனர்.
அப்போது, ரூபாய் ஒன்றரை லட்சத்தை சதீஷ்குமார், அதிகாரி ராஜேஸ்வரியிடம் லஞ்சமாகக் கொடுத்த போது மறைந்திருந்த காவல்துறையினர், அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் இவ்வளவு அதிகமான தொகையை லஞ்சமாகக் கொடுக்கும் போது, கையும் களவுமாக பிடித்துள்ளது இதுவே முதல் வழக்கு என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

