இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் சம்பா சாகுபடிக்கு (ஆக.27)- செவ்வாய்க்கிழமை பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் ஏரியிலிருந்து ராதாமதகிலிருந்து 10 கனஅடியும், வீராணம் புதிய மதகிலிருந்து 100 கனஅடி நீரையும் திறந்துவிட்டனர். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), செல்விராமஜெயம் (புவனகிரி), பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஏம்ராஜ், கண்காணிப்பு பொறியாளர் வி.சண்முகம், கொள்ளிடம் வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, உதவிப் பொறியாளர் உமா, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், விஜயகுமார், ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.