6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில் ஒருபோக விவசாயிகள் ஊர்வலம் : போராட்டம் அறிவிப்பு

அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன ஒரு போக விவசாயிகள் இன்று பெரிய அளவில் ஊர்வலம் நடத்தினர்.

News image
Updated On :21 டிசம்பர் 2013, 7:30 am

தர்மராஜ்

அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன ஒரு போக விவசாயிகள் இன்று பெரிய அளவில் ஊர்வலம் நடத்தினர்.

மேலூர் திருமங்கலம் ஒருபோக விவசாய நிலங்களில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு நடவு நடப்பட்டுள்ளது. கதிர் வெளியே வந்த நிலையில் இங்கு ஒன்று அல்லது 2 முறை தண்ணீர் இருந்தாலே போதும் என்ற நிலையில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பெரியாறு அணையில் 116.80 அடியும்,  வைகை அணையில் 45.14 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. பெரியாறு பாசனப் பகுதிக்கான நீர் இருப்பு, வைகை அணையில் 664 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும், வைகை பகுதி பாசனத்துக்கு 754 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில், ஒரு போக சாகுபடிக்கு 4 அல்லது 5 நசாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் தலைமையில் விவசாயிகள் போராட்ட அறிவிப்பு செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று கடையடைப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவும், உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் விவசாயிகள் அனைவரும் இன்று காலை திருமண மண்டபத்தில் கூடி போராட்டத்துக்கான முடிவை செய்தனர்.

நாளை கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்கவும், பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையிலும், மேலூர் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம், பெரிய கடை வீதி வழியாக பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு கூடினர்.

நாளை போராட்டத்தில் விவசாயிகள் குடும்பத்தோடு வந்து பேங்கேற்க முடிவு செய்துள்னர்.

இது மட்டும் அல்லாமல், பெரியாறு அணையில் இருந்து பி.டி. ராஜன் பெரியாறு கால்வாய் வழியாக தேனி மாவட்ட விரிவாக்க பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்தனர். விதிகளுக்கு புறம்பாக பொதுப்பணித் துறை அமைச்சர் தலையீட்டால் தண்ணீர் எடுத்துச்  செல்லப்படுவதாகவும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.