மதுரை மேலூரில் விவசாயிகள் சாலைமறியல்: அதிகாரிகள் பேச்சு வார்த்தை
மதுரை மேலூரில் ஒரு போக சாகுபடி பயிர்கள் விளையும் தருணத்தில் இருந்தும் தண்ணீர் இல்லாமல் கருகுவதால் பெரியாறு வைகை அணிகளில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலூர்-மதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து 2 மணி நேரம் தடைபட்டது.










