அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பூப்பந்து போட்டியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி 2-ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கு இடையேயான பூப்பந்து போட்டி டிச.20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப்போட்டியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்துடன் மோதிய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெற்றி பெற்று 2-ம் இடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி வீரர்களை புதன்கிழமை பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ், பதிவாளர் என்.பஞ்சநதம் ஆகியோர் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் உடற்கல்வித்துறை இயக்குநரும், கல்விப்புல முதல்வரும் ஜி.ரவீந்தரன், அணி மேலாளர் உதவிப் பேராசிரியர் ரா.சரவணன், பயிற்சியாளர்கள் மு.முரளிகிருஷ்ணா, கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி!

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


