அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஸ்ரீவிலி.யில் மினி லோடு வேன் மோதி கொத்தனார் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஞாயிற்றுக்கிழமை மதியம் மினி லோடு வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:29 pm

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஞாயிற்றுக்கிழமை மதியம் மினி லோடு வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மேலத்தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் காசி மகன் ராமச்சந்திரன் (26). திருமணம் ஆகாத இருவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தனது கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வெங்காய லோடு ஏற்றிக் கொண்டு சென்ற மினி லோடு வேன் டயர் வெடித்து தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் உடல் நசுங்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.