காட்டுமன்னார்கோயில் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பூர்த்தங்குடி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பூர்த்தகங்குடி, கலியமலை, ம.உத்தமசோழன் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திங்கள்கிழமை காலை திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜன், வருவாய் ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிற 31-1-2014க்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து கிராமமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதனால் சிதம்பரம்-கந்தகுமாரன் செல்லும் கிராம சாலையில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி!

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

