ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடியில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை

தூத்துக்குடி மாப்பிளையூரணி அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் வங்கி ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுதா (19), இவர் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தூத்துக்குடி அய்யனடைப்பு அருகேயுள்ள ஸ்ரீனிநகர் பகுதியைச் சேர்ந்தவர்

News image
Updated On :6 பிப்ரவரி 2013, 1:11 pm

INBARAJ

தூத்துக்குடியில் இளைஞர் ஒருவரும், கல்லூரி மாணவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். காதல் விவகாரத்தில் இந்த தற்கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாப்பிளையூரணி அருகேயுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் வங்கி ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுதா (19), இவர் தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தூத்துக்குடி அய்யனடைப்பு அருகேயுள்ள ஸ்ரீனிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கௌதம் (19). இவர் அய்யனடைப்பு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா சன்னாசி வீட்டில் தங்கியிருந்து மடத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். முருகேசனும், முத்துசாமியும் உறவினர்கள் ஆவர்.

இந்நிலையில், மடத்தூரில் உள்ள தொழிற்சாலையில் இருந்த கௌதம் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். அந்தப் பகுதியில் வேலை செய்தி கொண்டிந்தவர்கள் கௌதமை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், வழியிலேயே கௌதம் உயிரிழந்தார்.இதையெடுத்து, கௌதம் உடலை அடக்கம் செய்யும் வேலையில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனராம். கௌதம் இறந்த தகவல் வெளியான நிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய சுதா சண்முகபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம்.தகவலறிந்ததும் சிப்காட் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இளைஞரும், கல்லூரி மாணவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:

சுதாவும், கௌதமும் உறவினர்கள் என்பதால், இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் சுதாவின் தந்தை முருகேசனுக்கு பிடிக்கவில்லை.  இதனால் காதல் ஜோடிகள், தங்களது காதலுக்கு எதிர்ப்பு வருகிறது என்று தெரிந்தவுடன், கௌதம் தனது தந்தை முத்துசாமியிடம் திருமணம் செய்து வைக்குமாறு முறையிட்டுள்ளார். கோவையில் உள்ள முத்துசாமி தூத்துக்குடிக்கு வந்து முருகேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் முருகேசன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம்.இந்த விபரம் கௌதமுக்கு தெரியவரவே, தான் வேலை பார்க்கும் மில்லில் வைத்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.  காதலன் இறந்ததில் மனம்முடைந்த சுதா வீட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள சண்முகபுரம் கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாராம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என  தெரிவித்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.