தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தை அமாவாசை: தாமிரவருணியில் நீராடி பக்தர்கள் முன்னோர் வழிபாடு

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சனிக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

News image
Updated On :9 பிப்ரவரி 2013, 4:51 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் சனிக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை நாளில் இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர் நிலைகளில் நீராடி தர்ப்பனம் செய்து வழிபடுவது வழக்கம். சனிக்கிழமை பாபநாசம், காரையாரில் ஏராளமான பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் இரைத்து வழிபட்டனர்.

இதையொட்டி பாபநாசம் பாபநாசநாதசுவாமி கோயில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். தர்ப்பனம் செய்ய பாபநாசம், காரையாருக்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் கூட்டம் அலைமோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.