சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தில்லைககாளிக்கு மகாபிஷேகம்!

சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் தை அமாவாசையை

News image
Updated On :10 பிப்ரவரி 2013, 12:33 pm

சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகம் மற்றும் அர்த்தசாம சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

தில்லைக்காளியம்மனு 140-வது அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுண்டி சந்நிதியில் நெய் தீப ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமகாப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். பரமேஸ்வரி செல்வராஜ் விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொலைதூரக்கல்வி இயக்கக தொடர்பு அதிகாரி பாண்டியன், சிறப்பு அதிகாரி கிருஷ்ணகுமார், உதவி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செந்தில்வேலன், பேராசிரியர்கள் சின்னையன், அன்னை அறக்கட்டளை பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.