சாயரட்சை பூஜையில் 100-க்கும் மேற்பட்ட பொதுதீட்சிதர்கள் பங்கேற்ற ஸ்ரீகணபதி உபநிஷத், மஹான்யாசம், ஏகாதச ருத்ரம், சமகம் மந்திர ஜபம் செய்து வசோர்த்தாரா ஹோமம் உள்ளிட்ட விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் ஸ்படிக லிங்கமாக காட்சியளிக்கும் ஸ்ரீநடராஜமூர்த்திக்கு (ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு) பதினோரு வகையான அபிஷேகங்கள் செய்து விசேஷ மாலைகள், வஸ்திரங்கள் சாற்றி, பஞ்சமுக அர்சனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்க்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் அ.ஆனந்த தாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.