அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன், ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் ஆகியோர் தலைமையில் துணைவேந்தர் வீட்டின் வாயிற்படியில் அமர்ந்து காலை 11 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். ஆசிரியர்- ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் 7 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை வாபஸ் பெறக்கோரியும், வேளாண்புல முதல்வர் எம்.கதிரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊழியர் சங்க நிர்வாகிகள் 7 பேர் மீதான தற்காலிக பணிநீக்கம் உத்தரவை நீக்கி தனி, தனியாக உத்தரவு வழங்கியதை அடுத்து ஆசிரியர்-ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மாலை 3.30 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டதக்தை வாபஸ் பெற்றனர். ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை அடுத்த பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.