தூத்துக்குடியில் புதிதாக செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், ஏற்கனவே பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மத்திய அரசு வழங்குவது போல தமிழக அரசும் செவிலியர்களுக்கு பணி சலுகைகளை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலர் மனோகரி தலைமை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர் ஜூடிப் அல்போன்ஸ் முன்னிலை வகித்தார். கிளை செயலர் உமா மகேஸ்வரி, கெளரவ ஆலோசகர் சித்தானந்தம் பிரபு, இணைச் செயலர் செல்வம், நிர்வாகிகள் ஆவுடைத்தாய், ஜெனி உள்பட ஏராளமான செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.