சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் : ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் கைது

சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை நகர போலீஸார் இன்று கைது செய்தனர்.

Updated On :28 பிப்ரவரி 2013, 8:58 am

சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை நகர போலீஸார் இன்று கைது செய்தனர்.

பதவிஉயர்வில் எஸ்சி., எஸ்டி, ஒபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் டி.எஸ்.பிரேமலதா தங்கம் சிகாமணி தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட சிதம்பரம் காந்திசிலையிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது நகர போலீஸார் அவர்களை மறித்து 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பிரேமலதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவருக்கு எவ்வித தொடர்பு கிடையாது. இப்போராட்டம் கட்சி கொள்ளை விரோத செயலாகும். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங்க் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டிடம் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.