சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடில் பயிற்சிக்கு வந்த சென்னை பொறியியல் கல்லூரி மாணவர் பலி

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிக்கு, சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 133 பேர் கட்டடக் கலை மற்றும் அளவையியல் தொடர்பான பயிற்சிக்காக நேற்று இரவு வந்தனர். இவர்களில் ஒரு மாணவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:21 am

ஜான் பாஸ்கோ

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிக்கு, சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 133 பேர் கட்டடக் கலை மற்றும் அளவையியல் தொடர்பான பயிற்சிக்காக நேற்று இரவு வந்தனர். இவர்களில் ஒரு மாணவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த மாணவர் விக்னேஸ்வரன் (20). இவர் சென்னையில் கிரசண்ட் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது தந்தை அன்பழகன். இவர் பல்லாவரம் தபால் அலுவலகத்தில் பணியில் உள்ளார்.

ஏற்காடுக்கு பயிற்சிக்காகச் சென்ற அவர், கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயங்கியுள்ளார். இவர் பின்னர் சேலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.