இந்நிலையில், ஜங்கல்மஹால் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவதாவது ""நாங்கள் பொறுமையாக காத்திருக்கிறோம். எங்களது கோரிக்கைகளான, கடனுக்கான வட்டியை செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம், கடனை திருப்பிச் செலுத்தும் திட்டத்தில் மறுசீரமைப்பு ஆகியவை தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்துவோம்.முந்தைய மார்க்சிஸ்ட் அரசுக்கு, கடன் வாங்குவதில் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்காத மத்திய அரசு, இப்போது எங்களுக்கு சலுகை அளிக்க மறுக்கிறது. இதை மேற்கு வங்க மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்'' என்று கூறினார்.