இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனிடம் இருந்து செல்பேசி மற்றும் சிம்கார்டுகள் உள்ளிட்டவை கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முருகன் மீது சிறைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முருகனும், அவரது மனைவி நளினியும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்கவும், மற்ற உறவினர்கள் முருகனை சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.