மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

3 கன்றுக் குட்டிகளை ஈன்ற பசு!

பொள்ளாச்சி முத்தூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் பசு ஒரே பிரசவத்தில் 3 கன்றுக் குட்டிகளை ஈன்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 3:48 am

தினமணி

பொள்ளாச்சி முத்தூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் பசு ஒரே பிரசவத்தில் 3 கன்றுக் குட்டிகளை ஈன்றது.
 கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்டது முத்தூர் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவர் துரைசாமி (40). விவசாயம் செய்து வருகிறார். இவர் 5 பசுக்களை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசு கடந்த வியாழக்கிழமை இரவு ஒரே பிரசவத்தில் ஒரு பெண் கன்று, 2 ஆண் கன்றுகள் என மொத்தம் 3 கன்றுக் குட்டிகளை ஈன்றது.
 இதுகுறித்து விவசாயி துரைசாமி கூறியது: கிணத்துக்கடவு அரசு கால்நடை மருத்துவமனையில் இந்த பசுவிற்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டது. தற்போது இந்தப் பசு மூன்று குட்டிகளை ஈன்றது அதிசயமாக உள்ளது என்றார்.
 இதுதொடர்பாக, பொள்ளாச்சி மண்டல கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் பி.நாகராஜன் கூறியது: சாதாரணமாக ஒரு பசு மாட்டில் ஒரு கருமுட்டை உருவாகி, ஒரு கன்றுக் குட்டி மட்டும் ஈன்றும். இந்தப் பசு செயற்கை முறையில் கருவூட்டப்பட்டதால், 2 கருமுட்டைகள் உருவாகின. அதில் ஒரு கருமுட்டை இரண்டாகப் பிரிந்து 2 ஆண் கன்றுக் குட்டியாகவும், ஒரு கருமுட்டை பெண் கன்றுக் குட்டியாகவும் உருவாகி உள்ளது. மூன்று குட்டிகளும் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ளது.
 15 ஆண்டுகளுக்கு முன் அரசம்பாளையம் கிராமத்தில் இதுபோன்று, ஒரு பசு மாடு ஒரே பிரசவத்தில் 3 கன்றுக் குட்டிகளை ஈன்றது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.