80,000 இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு: ஒமர் அப்துல்லா அறிவிப்பு

மக்களுடைய ஆதரவாலும் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களாலும் அரசு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நேரத்தில் மாநிலத்தின் அனைத்து மட்டங்களிலும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படித்த 80 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஒமர் அப்துல்லா பேசியதாவது:

மக்களுடைய ஆதரவாலும் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களாலும் அரசு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நேரத்தில் மாநிலத்தின் அனைத்து மட்டங்களிலும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் கிராமத் தலைவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.அடுத்தடுத்த மாதங்களில் படித்த 80 ஆயிரம் மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். அதற்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.    

என்று ஒமர் அப்துல்லா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com