பலத்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, நேர்முகத் தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நேர்முகத் தேர்வு இப்போது வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தலைநகரங்களில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அழைப்புக் கடிதங்கள் சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். தங்களுடைய தன் விவரக் குறிப்புகளை இதுவரை பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள்http:www.tncoopsrb.org என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பதிவேற்றம் செய்த விவரங்களை, இரு நகல்கள் எடுத்து அவற்றில் தங்கள் புகைப்படங்களை ஒட்டி, அவற்றுடன் நேர்முகத் தேர்வுக்குத் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (அசல் மற்றும் இரு நகல்கள்) எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறார்கள்.