இன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடைபெற்று, மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதியை சேர்ந்தார். அங்கு ஸ்ரீஆண்டாளுக்கு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் கைத்தல சேவை முடிந்து ஸ்ரீபெரிய பெருமாள் மூலஸ்தானத்திற்கு சேருதல் நடைபெற்று பின்னர் திருக்காப்பு நீக்கல் நடைபெற்றது.அரையர் வியாக்கியானம், திருப்பாவை 1-ம் பாட்டு மற்ற பாட்டுகளும் சேவித்தல் நடைபெற்று, ஸ்தலத்தார் உற்சவ வைபவம் வாசித்தல், பஞ்சாங்கம் வாசித்தல் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனமாகி மூலஸ்தானம் சேர்ந்தார்.இந் நிகழ்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.