மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி.யில் கிணற்றில் தவறி விழுந்து சத்தீஸ்கர் மாநில இளைஞர் சாவு

சத்தீஸ்கர் மாநிலம், கொண்டக்கால் மாவட்டம், புகப்போரான் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்மர்சிங் மகன்

News image
Updated On :7 ஜனவரி 2013, 3:00 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் காயமுற்ற சத்தீஸ்கர் மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலம், கொண்டக்கால் மாவட்டம், புகப்போரான் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்மர்சிங் மகன் தினேஷ் (25). இவர் போர்வெல் லாரியில் வேலை செய்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.முத்துலிங்காபுரம் ஊருக்கு வடக்கேயுள்ள அழகுமலை என்பவரின் பம்பு செட் தோட்டத்தில் உள்ள கிணற்றில் டிசம்பர் 20-ம் தேதி சைடூ போர் போட்டுள்ளார்கள். அதில் தினேஷ் வேலை செய்துள்ளார். வேலை முடிந்து கிணற்றில் இருந்து ஏறும் போது தவறி உள்ளே விழுந்த தினேஷ் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.