தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு கத்திக் குத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், கிருஷ்மூர்த்தி மகன் வீரபுத்திரன் (28). திருமணம் ஆகாத இவர் தேங்காய் வெட்டு வேலைக்குச் செல்வாராம். இவர் நேற்று(திங்கள்கிழமை) இரவு இங்குள்ள டி.இ


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை பல இடங்களில் குத்திவிட்டுச் செனற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, ராமசாமியாபுரம், கிருஷ்மூர்த்தி மகன் வீரபுத்திரன் (28). திருமணம் ஆகாத இவர் தேங்காய் வெட்டு வேலைக்குச் செல்வாராம். இவர் நேற்று(திங்கள்கிழமை) இரவு இங்குள்ள டி.இ.எல்.சி. பள்ளி அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இன்று அதிகாலை அங்கு வந்த நபர், வீரபுத்திரனை பல இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து அவரது தந்தை கூமாப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீரபுத்திரனை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கத்தியால் குத்திவிட்டுச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...