ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாதி மோதல்: நால்வர் காயம்: 9 பேர் கைது: பதற்றம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிரிககெட் வெற்றி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சாதி மோதலில் நால்வர் காயம் அடைந்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிரிககெட் வெற்றி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சாதி மோதலில் நால்வர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 8 பேரை தேடி வருகிறார்கள். இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இப் பகுதியில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட இரு பிரிவினரிடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் அவ்வப்போது மோதல்கள் நடைபெறும்.
இந்நிலையில் வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் உள்ள நாடார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரு சமுதாயத்தினர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதில் வத்திராயிருப்பு தேவர் அணியினரை ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த அணியினர் வென்றுள்ளனர். இதனையடுத்து மைதானத்தைவிட்டு வெளியே வரும்போது வெற்றி பெற்ற அணியினர் ஆராவாரம் செய்து கொண்டு வெற்றியை கொண்டாடியுள்ளனர்.
அப்போது விளையாட்டு நடைபெற்ற கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர், எங்கள் ஊரில் வந்து கிரிக்கெட் விளையாடிவிட்டு நீங்கள் எப்படி வெற்றியைக் கொண்டாடலாம் என்று கூறி அவர்களைத் தாக்கியுள்ளார்கள்.
இதில் சுந்தரபாண்டியம், தாட்கோ காலனியைச் சேர்ந்த மலைராஜ் மகன் பிரபாகரன் (26), ஊரணிமுத்து மகன் முத்துக்குமார் (18), சட்டநாதன் மகன் சுரேஷ்கிரி (20) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு போலீஸில் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோபாலபுரம், சூசை மகன் சுந்தரமூர்த்தி (22), சஞ்சீவி மகன் சுந்தர்ராஜ் (22), ராமர் மகன் ஜெயராஜ் (24), அய்யப்பன் மகன் கோபால் (25), தவமணி மகன் உதயராஜன் (23), தவமணி மகன் டைமன்ட்ராஜ் (25), ஆழ்வார் மகன் கோவிந்தராஜ் (22), தன்னாசி மகன் தங்கபாண்டி (22), சண்முகம் மகன் இசக்கிபாண்டி (19) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக செம்பட்டி விலக்கு சேசபுரம் அருகே வத்திராயிருப்பு, ரோட்டடி தெருவைச் சேர்ந்த எஸ்.சீனிவாசன் செட்டியார் மகன் நாகராஜ் (39) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில், தனது செங்கல்சூளையில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு வாங்க சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சுந்தரபாண்டியம் தாட்கோ காலனியைச் சேர்ந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்துள்ளது. அவர் நான் செட்டியார் சமுதாத்தைச் சேர்ந்தவன். என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். கும்பல் உன்னைப் பார்த்தால் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்தவன் போல் உள்ளது என்று கூறி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்து செல்போனை உடைத்துள்ளது.
இது குறித்து நாகராஜ், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ம.மலையரசன், மு.பால்பாண்டி, வா.சந்தனராஜ், பா.வனராஜ், ச.பாலமுருகன், ச.கந்தவேல், வ.மூர்த்தி, வ.வெயிலுமுத்து ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இவர்களை தேடி வருகிறார்கள்.
இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் தீவிர பந்தோபஸ்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...