தூத்துக்குடி போல்பேட்டை நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன் (49). இவர் அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இன்று அதிகாலை விஜயராகவன் இறந்து கிடந்தாராம்.தகவலறிந்ததும் வடபாகம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று விஜயராகவனின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த காவலாளி விஜயராகவனை யாரேனும் அடித்துக் கொன்றனரா? அல்லது குடிபோதையில் கீழே விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த விஜயராகவன் மீது காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.