குடும்பத் தகராறில் ஆயுதடைப்படை காவலர் விஷமாத்திரை அருந்தி தற்கொலை

அருப்புக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த காளிப்பிள்ளையின் மகன் சரவணன்(34). இவர் அருப்புக்கோட்டையில் ஆயுடைப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி
Updated on
1 min read

அருப்புக்கோட்டையில் குடும்பத்தகராறு காரணமாக பன்றிக்கு வைக்கும் விஷமாத்திரையை உட்கொண்டு ஆயுதப்படை போலீஸார் தற்கொலை செய்து கொண்டார்.

அருப்புக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த காளிப்பிள்ளையின் மகன் சரவணன்(34). இவர் அருப்புக்கோட்டையில் ஆயுடைப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி தங்கப்பொண்ணு(26), ஒரு மகள் மற்றும் இருமகன்கள் உள்ளனர். இவர் ஓய்வு நேரங்களில் வீட்டுக்குச் செல்லாமல் அவரது தோட்டத்தில் பணிகளை பார்த்து விட்டு தாமதமாகவே செல்வராம். இதனால், இருவருக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இதேபோல் தான் சனிக்கிழமை இரவும் தாமதமாக வந்தாதால், அவரது மனைவி தங்கப்பொண்ணு(26)பிரச்னை செய்துள்ளார். இதனால் நிம்மதியிழந்த சரவணன், வீட்டிற்குள் சென்று தோட்டப் பயிர்களை பாதுகாப்பதற்காக வாங்கி வைத்திருந்த பன்றி மாத்திரையை உட்கொண்டுள்ளார். இது குறித்து தெரிய வந்ததும் உடனடியாக அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தங்கப்பொண்ணு புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com