47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற வழக்குரைஞர்கள், இளவரசன் தாய் உள்பட உறவினர்கள் கைது

இந்நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்தினார் டிஎஸ்பி நடராஜன். இதனால் வாக்குவாதம் எழுந்தது. இதை அடுத்து, இளவரசன் உறவினர்கள், வழக்குரைஞர்கள் பிரதான நுழைவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :11 ஜூலை 2013, 9:44 am

ரவி

இளவரசன் உடல் வைக்கப்பட்டிருக்கும் தருமபுரி மருத்துவமனைக்குள் வழக்குரைஞர்கள் செங்கொடி, தமயந்தி ஆகியோர் உள்ளே புக முயன்றனர்.

முன்னதாக அவர்கள் நல்லக்கண்ணுவைச் சந்தித்து விட்டுவந்தனர். ஆனால், வளாகத்தில் போலீஸார் அதிகம் பேர் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களைத் தடுத்து நிறுத்தினார் டிஎஸ்பி நடராஜன். இதனால் வாக்குவாதம் எழுந்தது. இதை அடுத்து, இளவரசன் உறவினர்கள், வழக்குரைஞர்கள் பிரதான நுழைவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இளவரசனின் தாய் கிருஷ்ணவேணி, தந்தை இளங்கோவன், வழக்கறிஞர்கள் தமயந்தி, செங்கொடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, வண்டியில் ஏற்றப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.