/

விஜயகாந்த் சொன்னது ஒன்று, செய்தது ஒன்று

தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.

News image
Updated On :11 ஜூலை 2013, 10:34 am

ச.​ கார்த்​தி​கே​யன்

தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.

காலையில் வீரா வேசமாக வசனம் பேசிய விஜயகாந்த், மதியம், அவர் மீது கொலை முயற்சி வழக்கு மற்றும் ஆட் கடத்தல் முயற்சி என வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக செல்போனில் தகவல் வந்ததை அடுத்து, யாரிடமும் தகவல் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென காரில் புறப்பட்டு, ரிஷிவந்தியத்தில் இருந்து மாயமானார்.

அவர் திறந்து வைப்பதற்காக பல்வேறு நலத்திட்டப் பணிகள் தயாராக இருந்த நிலையில், அவை திறக்கப்படாமல் போனது.

காலையில் சொன்னது ஒன்றாகவும், மதியம் செய்தது ஒன்றாகவும் ஆகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.