மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூர் கிரானைட் முறைகேடு: அரசுக்கு ரூ.1200 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார்

மதுரையில், அரசுக்கு சொந்தமான கண்மாய், புறம்போக்கு இடங்களில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக ரூ.1200 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக காவல்துறை புகார் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2013, 6:17 am

தர்மராஜ்

மதுரையில், அரசுக்கு சொந்தமான கண்மாய், புறம்போக்கு இடங்களில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக ரூ.1200 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக இரு கிரானைட் நிறுவனங்கள் மீது காவல்துறை மேலும் இரு புகார்களைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, பிஆர்பி மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்கள் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருவாதவூரில் உள்ள கீழசுனைக்குளம் மற்றும் அதை ஒட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பிஆர்பி கிரானைட் நிறுவன அதிபர் பழனிச்சாமி மற்றும் அவரது மகன் பிரேம்குமார், உறவினர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி 2 லட்சத்து 98,543.42 செ.மீ. கிரானைட் கற்களை வெட்டி, கடத்தியுள்ளனர் என்று விஏஓ அனுராதா மேலூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து, கிரானைட் நிறுவன அதிபர் மற்றும் அதன் பங்குதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பிஆர்பி கிரானைட் நிறுவனத்தார் மீது 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே பகுதியில் சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ், உமா, சூரியபிரகாஷ், ஹரிஹரன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் சேர்ந்து ரூ.90.42 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி, கடத்தியதாக மற்றொரு புகாரும், மேலூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சிந்து கிரானைட் உரிமையாளர் மற்றும் பங்குதாரர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மேலூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.