பின்னர் சுவாமியை அம்மன் மூன்றுமுறை வலம் வந்தார். இதன்பின் அம்மனும் சுவாமியும் மாலைகள் மாற்றிக்கொள்ளுதல் நடைபெற்றது. அதன்பின்னர் கால்பிரிவு மண்டகப்படிக்குள் சென்றடைந்த ஆனந்தவல்லி அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளியும் சோமநாதர் சுவாமி விருஷப வாகனத்தில் எழுந்தருளியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திருமணமாகாத இளம்பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்க வேண்டி சுவாமியின் கையில் வைத்து எடுக்கப்பட்ட மாலைகளை திருமணமாகாத இளம் பெண்கள் வாங்கிச் சென்றனர். தொடர்ந்து ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பலவகை தீபாரதனைகள் காட்டப்பட்ட பின்பு இருவரும் கோயிலைச் சுற்றி வீதி உலா வந்தனர். தபசு விழாவில் ஏராளமான பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.திங்கள்கிழமை சந்தனக்காப்பு உற்சவத்துடன் இந்தாண்டு ஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழா நிறைவு பெற்றது.