இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இடப் பிரச்னைத் தொடர்பாக அமைச்சர் முன்னிலையில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கரூரில் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பகுதி நேர நூலகம் திறப்பு விழா, குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்டார். சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைச்சர்

Updated On :9 ஜூன் 2013, 4:53 pm IST

கரூரில் இடப் பிரச்னையைத் தீர்க்கக்கோரி, போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பகுதி நேர நூலகம் திறப்பு விழா, குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்டார். சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைச்சர் கார் சென்றபோது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு, அதிமுக கொடியுடன் அமைச்சரை நெருங்க முயன்றார்.இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தீக்குளிக்க முயன்ற நபர் ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (38). மர கடைசல் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய பாட்டி மருதாயிக்கும், பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக பிரச்னை உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அந்தப் பகுதிக்கு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் முன்னிலையில், மயில்சாமி, உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, பிரச்னையத் தீர்த்து வைக்க வேண்டும் என முழக்கம் எழுப்பியுள்ளார். இதையடுத்து, கரூர் நகரப் போலீஸார் தற்கொலைக்கு முயன்றதாக மயில்சாமி மீது  வழக்குப் பதிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.