தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போச்சம்பள்ளி அருகே பெண் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :14 ஜூன் 2013, 6:00 pm

ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மத்தூர் அருகே உள்ள சாம்பல்பட்டியைச் சேர்ந்தவர் தையலர் முகமது சலீம் (35). இவரது மனைவி பரிதாபீ (33). இவர்களுக்கு அஸ்லாம் (15), முகமது (12) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

கணவரை பிரிந்து வாழும் பரிதாபீ மத்தூரில் குழந்தைகளுடன் தங்கியிருந்து கூலி வேலைக்கு செய்து வருகிறார்.

தர்மபுரியைச் சேர்ந்த சுதர்சனம் (32). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வரும் இவருக்கும், பரிதாபீக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டாக இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன் போச்சம்பள்ளி அருகே உள்ள வடம்மலம்பட்டிக்கு இவர்கள் குடிவந்தனர். இதில் வியாழக்கிழமை இரவு சுதர்சனம், பரிதாபீயின் வீட்டிற்கு வந்துள்ளார். நள்ளிரவில் பரிதாபீக்கும், சுதர்சனத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில், சுதர்சனம் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அங்கிருந்து சுதர்சனம் தப்பியோடி விட்டாராம்.

இதுபற்றி தகவல் அறிந்த, பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் கஜேந்திரன், போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுதர்சனத்தை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.