டயர் தீ பிடித்து எரிந்ததால் அதில் இருந்து வெளியான கரும்புகை குறிஞ்சிநகர் முழுவதையும் சூழ்ந்தது. இதனால், மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். மேலும், புகைமூட்டம் காரணமாக சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையெடுத்து, தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தூத்துக்குடி தீயனைப்பு படை அதிகாரி சண்முகம் தலைமையில் தீயனைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ ஒருமணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.தீ விபத்துக்கான காரணம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பாலன பழைய டயர்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.