சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும்: தபால்காரர்கள் கோரிக்கை

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர்கள் மற்றும் பன்திறன் ஊழியர்கள் (எம்.டி.எஸ்) அஞ்சல் ஊழியர்களின் தேசிய சங்கம் காஞ்சிபுரம் கோட்டம் சார்பில் காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு

Updated On :28 ஜூன் 2013, 7:31 pm IST

தபால்காரர்களின் பிரச்னையைப் போக்க கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர்கள் மற்றும் பன்திறன் ஊழியர்கள் (எம்.டி.எஸ்) அஞ்சல் ஊழியர்களின் தேசிய சங்கம் காஞ்சிபுரம் கோட்டம் சார்பில் காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோட்டச் செயலாளர்கள் ஜெயராஜ், மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

தபால்காரர்கள் பிரச்னைகள் குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி பரிந்துரைகளின்படி கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தபால்காரர்கள் வேலை அளவீடுகள் மாற்றி அமைக்க வேண்டும். மக்கள்தொகை நெருக்கமாக உள்ள பகுதியின் டெலிவரி அளவீடு பற்றி தெளிவாக ஆணை வெளியிட வேண்டும். தபால்காரர்களின் பீட்டுகள் விஞ்ஞான முறைப்படி அளவிடப்பட வேண்டும். பன்திறன் ஊழியர்களுக்கு பணிக்கேற்ப சைக்கிள் அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும். மெட்ரோ நகரங்களில் உள்ள நோடல் டெலிவரி சென்டர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.