சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பல்கலை மாணவர்கள் ரயில் மறியல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவர்கள் இன்று இலங்கைக்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :4 மார்ச் 2013, 7:37 am

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவர்கள் இன்று இலங்கைக்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக அறிவியல் மற்றும் கலை புல மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிறகு அங்கிருந்து ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த மாணவர்கள், ஐ.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த 

திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பிறகு, சோழன் விரைவு ரயில் 15 நிமிடம் காலதாமதமாக 12.50க்கு புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.