கடலூரில் தீயணைப்பு வண்டி ஒன்று வீட்டின் மீது மோதியதில் சுவர் முற்றிலும் சரிந்தது.
சிதம்பரத்தைச் சேர்ந்த தீயணைப்பு வண்டி ஒன்று, கடலூரில் பழுது நீக்கக் கொடுக்கப்பட்டிருந்தது. பழுது சரிசெய்யப்பட்ட பிறகு அதனை ஓட்டிக் கொண்டு சிதம்பரம் நோக்கிச் சென்றார் டிரைவர். அப்போது, கடலூர் முதுநகரில்
செல்லங்குப்பம் என்ற பகுதியில் சென்றபோது, போலீஸார் இருவர் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து, ஒரு வீட்டின் மீது மோதியது தீயணைப்பு வண்டி. அதில், சுவர் சரிந்தது.
படுகாயம் அடைந்த போலீஸார் இருவரும், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.