வெள்ளியிலான சிங்கார செடி விளக்கு நான்கு வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பொதுதீட்சிதர்கள் மூலம் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சமர்பணம் செய்யப்பட்டது. இந்த விளக்கு சித்சபைக்கு முன்புள்ள கனகசபையில் இடதுபுறம் வைக்கப்பட்டு, விளக்கில் உள்ள 33 முகங்களும் ஏற்றபட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் காசிமணி, செயலாளர் கே.பி.கந்தசாமி, பொருளாளர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பஙகேற்றனர்.