/

சிதம்பரத்தில் பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு

சிதம்பரம் முத்தையாநகர் ஓம்சக்திசாலையைச் சேர்ந்தவர் சீனுவாசன் (70). இவரது மனைவி சந்திரலேகா (68) நேற்று காலை வீட்டு வாசலில் நீர் தெளித்து கோலம்

News image
Updated On :26 மார்ச் 2013, 10:33 am

G.Sundararaj

சிதம்பரத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை மர்மஆசாமிகள் பறித்துச் சென்றனர்.

சிதம்பரம் முத்தையாநகர் ஓம்சக்திசாலையைச் சேர்ந்தவர் சீனுவாசன் (70). இவரது மனைவி சந்திரலேகா (68) நேற்று காலை வீட்டு வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம ஆசாமிகள் சந்திரலேகா கழுத்திலிருந்து 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தலைமறைவானார்கள். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.