தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரத்தில் பெண்ணிடம் நூதன முறையில் பத்தரை பவுன் நகைகள் திருட்டு

சிதம்பரத்தில் நூதன முறையில் பெண்ணிடம் பத்தரை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

Updated On :27 மார்ச் 2013, 7:41 am

சிதம்பரத்தில் நூதன முறையில் பெண்ணிடம் பத்தரை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

சிதம்பரம் சிவசக்திநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் விரிவாக்க அலுவலர் வைத்தியலிங்கம். இவரது மனைவி மங்கையர்கரசி (55) வெளியூர் சென்று ஓமக்குளம் பஸ்நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு சென்றார். அப்போது முதல் கிராஸ் ரோட்டில் மர்ம ஆசாமிகள் இருவர் வழிமறித்து தாங்கள் போலீஸார் என்றும், அப்பகுதியில் கலவரம் நடப்பதாகவும் நகைகளை பத்திரமாக எடுத்துச் செல்லவும் எனக்கூறி மங்கையர்கரசி கழுத்தில் அணிந்திருந்த பத்தரை பவுன் மதிப்பிலான டாலர் செயின், ஒரு செட் வளையல், 2 மோதிரங்கள் ஆகியவற்றை கழற்றி பெற்று பொட்டலமாக மடித்து கொடுத்து அனுப்பியுள்ளனர். மங்கையர்கரசி வீட்டிற்கு சென்று பார்த்த போது நகைகளுக்கு பதிலாக பொட்டலத்தில் கற்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.